மதுபான கொள்கை முறைகேடு: விசாரணைக்காக சந்திரசேகரராவ் மகள் வீட்டுக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள்

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகளும், எம்.எம்.எல்.சி.யுமான கவிதாவுக்கு தொடர்பு.விசாரணைக்கு ஆஜராகுமாறு கவிதாவுக்கு கடந்த வாரம் சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
மதுபான கொள்கை முறைகேடு: விசாரணைக்காக சந்திரசேகரராவ் மகள் வீட்டுக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள்
Published on

ஐதராபாத்:

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த முறைகேட்டில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகளும், எம்.எம்.எல்.சி.யுமான கவிதாவுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது.

இதைத்தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு கவிதாவுக்கு கடந்த வாரம் சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பி இருந்தது. 6-ந்தேதி ஆஜராக அவருக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் அவகாசம் கேட்டு பதில் கடிதம் அனுப்பினார்.

11 முதல் 15 வரையிலான தேதிகளில் (13 தவிர) விசா ரணைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் கவிதாவிடம் விசாரணை நடத்துவதற்காக ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சென்றனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com