search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவைப் போல உலக அளவில் வேறு எந்த நீதித்துறையும் சுதந்திரமாக இல்லை-  மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ பேச்சு
    X

    என்.வி.ரமணா      கிரண் ரிஜிஜூ

    இந்தியாவைப் போல உலக அளவில் வேறு எந்த நீதித்துறையும் சுதந்திரமாக இல்லை- மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ பேச்சு

    • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்து தற்போதைய சூழலை பிரதிபலிக்கிறது.
    • இந்தியாவில் நீதித்துறை முற்றிலும் பாதுகாக்கப் பட்டுள்ளது.

    ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற தேசிய சட்ட ஆய்வு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ஊடகங்களால் பரப்பப்படும் பாரபட்சமான கருத்துக்கள் மக்களைப் பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.

    ஊடகங்கள் பொறுப்பை மீறி, எங்கள் ஜனநாயகத்தை எடுத்துக் கொள்வதாகவும், இது போன்ற செயல்பாட்டினால் நீதி வழங்குவது பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அச்சு ஊடகம் குறிப்பிட்ட அளவு பொறுப்புணர்வைக் கொண்டுள்ளது என்றும் ஆனால் மின்னணு ஊடங்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்நிலையில் மின்னணு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் நாடு முழுவதும் தற்போதைய சூழலை பிரதிபலிப்பதாகவும், இது குறித்து தாம் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். இது குறித்து யாரும் பேச விரும்பினால், பொது களத்தில் விவாதிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    உலகில் எந்த நீதித்துறையும் இந்தியாவைப் போல சுதந்திரமாக இல்லை என்றும், இந்தியாவில் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை முற்றிலும் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். எந்த நாட்டைச் சேர்ந்த நீதிபதியோ அல்லது நீதித்துறையோ இந்தியாவைப் போல சுதந்திரமாக இல்லை என்று என்னால் தெளிவாக கூற முடியும் என்றும் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.

    Next Story
    ×