என் மலர்tooltip icon

    இந்தியா

    கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுமா? - திங்கள்கிழமை தீர்ப்பு எழுதும் உச்சநீதிமன்றம்
    X

    கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுமா? - திங்கள்கிழமை தீர்ப்பு எழுதும் உச்சநீதிமன்றம்

    • இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக வெற்றிக்கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
    • இந்த விவகாரம் தொடர்பாக தவெக, பாஜக வழக்கறிஞர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மனுதாக்கல் செய்தனர்.

    கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

    இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக வெற்றிக்கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி, கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும் சிபிஐ விசாரணை கோரியும் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தவெக, பாஜக வழக்கறிஞர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. திங்கள்கிழமை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    Next Story
    ×