search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகாவில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிரடி சோதனை.. தாசில்தார் வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்
    X

    கர்நாடகாவில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிரடி சோதனை.. தாசில்தார் வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்

    • வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தததாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
    • தாசில்தாரின் வீட்டில் இருந்து சொத்துக்கள் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    விஜயபுரா:

    கர்நாடக மாநிலம் விஜயபுரா மற்றும் பாகல்கோட் மாவட்டங்களில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள அரசு அதிகாரிகளின் வீடுகளில், லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 20 அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் கே.ஆர்.புரா தாசில்தார் அஜித் ராய் என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.10 லட்சம் பணம் கட்டுக்கட்டாக வைத்திருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், சொத்துக்கள் தொடர்பான பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தததாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் அரசு ஊழியர்கள் ஊழல் செய்வதை தடுக்கும் நோக்கில் லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறை இயங்கி வருகிறது.

    Next Story
    ×