search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காவிரியில் 15 நாட்களுக்கு விநாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கவேண்டும் - காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
    X

    காவிரியில் 15 நாட்களுக்கு விநாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கவேண்டும் - காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

    • காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது.
    • தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த அவசர மனு மீது முடிவெடுக்கும் வகையில் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. காவிரியில் இருந்து வினாடிக்கு 24,000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.

    இந்நிலையில், காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    செப்டம்பர் 12-ம் தேதி வரை தொடர்ந்து 15 நாட்கள் வினாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என எஸ்.கே.கல்தர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகா அரசு இந்த முடிவை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது.

    Next Story
    ×