என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
கர்நாடகாவில் திருமண உணவு சாப்பிட்ட 100 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
ByMaalaimalar6 May 2024 4:46 AM GMT (Updated: 6 May 2024 5:36 AM GMT)
- உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திருமண நடந்த இடத்தை பார்வையிட்டனர்.
- உணவு மற்றும் ஐஸ்கிரீம் மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பினர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் சாத்தனூர் தாலுகா சன்னப்பட்டிணம் பகுதியில் ஒரு திருமண விழா நடைபெற்றது. மதியம் உணவுக்கு பின்பு ஐஸ்கிரீம் வழங்கப்பட்டது. இந்த திருமண விழாவில் உணவு சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களை உள்ளூர் அரசு மருத்துவமனை, மாகடி அரசு மருத்துவமனை, ராம்நகர் மாவட்ட மருத்துவமனை மற்றும் மாண்டியா மாவட்ட மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று அனுமதிக்கப்பட்டனர். இதில் பெரும்பாலோனார் குழந்தைகள். இதுபற்றி தெரியவந்ததும், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திருமண நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும் உணவு மற்றும் ஐஸ்கிரீம் மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பினர். அதன் அறிக்கை வந்த பின்பே என்ன காரணம் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X