search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஐ.நா.சபை பொதுச் செயலாளர் சந்திப்பு
    X

    வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்த ஐ.நா.சபை பொதுச் செயலாளர்

    வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஐ.நா.சபை பொதுச் செயலாளர் சந்திப்பு

    • அன்டோனியோ குட்டெரஸ் கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. சபை பொதுச் செயலாளராக பதவியேற்றார்.
    • இந்தியா வந்துள்ள ஐ.நா.சபை பொது செயலாளர் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தார்.

    அகமதாபாத்:

    ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டெரஸ் 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான இவர், கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. சபை பொதுச் செயலாளராக பதவியேற்றார். தொடர்ந்து ஜனவரி 1, 2022ம் ஆண்டு முதல் இரண்டாவது முறையாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்திய பயணத்தின் முதல் நாளான இன்று மும்பையில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் 26/11 பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்திற்கு சென்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் அஞ்சலி செலுத்தினார்.

    இந்நிலையில், குஜராத் சென்றுள்ள ஐ.நா.சபை பொது செயலாளர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    Next Story
    ×