நடுவானில் எஞ்சின் கோளாறு.. இண்டிகோ விமானம் மும்பையில் அவசர தரையிறக்கம்

சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
நடுவானில் எஞ்சின் கோளாறு.. இண்டிகோ விமானம் மும்பையில் அவசர தரையிறக்கம்
Published on

டெல்லியில் இருந்து கோவா நோக்கிச் சென்று கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 6E-6271, இன்று (புதன்கிழமை) இரவு மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

விமானத்தின் ஒரு எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதே இதற்குக் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் இரவு 8 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானம், நடுவானில் எஞ்சின் கோளாறை சந்தித்தது. இதையடுத்து, மும்பைக்கு திருப்பி விடப்பட்டு, இரவு 9.52 மணியளவில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

விமானத்தின் பாதுகாப்பான தரையிறக்கத்திற்குப் பிறகு, பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com