search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தினசரி பாதிப்பு சற்று குறைந்தது- புதிதாக 918 பேருக்கு கொரோனா
    X

    தினசரி பாதிப்பு சற்று குறைந்தது- புதிதாக 918 பேருக்கு கொரோனா

    • கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 59 ஆயிரத்து 182 பேர் குணமடைந்துள்ளனர்.
    • அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 236 பேர், கேரளாவில் 149 பேர், குஜராத்தில் 133 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு 128 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 1,071 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது.

    இந்நிலையில் இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 918 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 236 பேர், கேரளாவில் 149 பேர், குஜராத்தில் 133 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 96 ஆயிரத்து 338 ஆக உயர்ந்துள்ளது.

    தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 59 ஆயிரத்து 182 பேர் குணமடைந்துள்ளனர். இதில் நேற்று 479 பேர் அடங்குவர்.

    தொற்று மீட்பு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் 6,350 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 435 அதிகமாகும்.

    கொரோனா பாதிப்பால் நேற்று ராஜஸ்தானில் 2 பேர், கர்நாடகாவில் ஒருவர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 1-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,806 ஆக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×