search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    1000-ஐ கடந்த கொரோனா ஜே.என். 1 தொற்று - எந்த மாநிலத்தில் அதிகம் தெரியுமா?
    X

    1000-ஐ கடந்த கொரோனா ஜே.என். 1 தொற்று - எந்த மாநிலத்தில் அதிகம் தெரியுமா?

    • கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது சரிவடைந்துள்ளது.
    • 16 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனா ஜே.என். 1 பரிசோதனை.

    இந்தியாவின் இன்சாகோக் (இந்திய சார்ஸ்-கோவி-2 ஜெனோமிக்ஸ் கன்சோர்டியம்) நாட்டில் 1104 பேருக்கு கொரோனா ஜே.என். 1 வகை தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக அறிவித்து இருக்கிறது. எனினும், நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த வாரம் இந்தியாவில் 4 ஆயிரத்து 374 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், இந்த வாரம் 3 ஆயிரத்து 368 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இந்தியாவின் 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா ஜே.என். 1 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    இதில் கர்நாடகாவில் 214 பேருக்கும், ஆந்திர பிரதேசத்தில் 189 பேருக்கும், மகாராஷ்டிராவில் 170 பேருக்கும் கேரளா மாநிலத்தில் 154 பேருக்கும் கொரோனா ஜே.என். 1 தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், ஜே.என். 1 தொற்றாளர்கள் அதிகம் கொண்ட மாநிலமாக கர்நாடகா உருவாகியுள்ளது.

    Next Story
    ×