புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு எதிரொலி- நாளை டெல்லி எல்லைகளுக்கு சீல்

'சென்டிரல் விஸ்டா' என்ற திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பாராளுமன்ற கட்டிடப்பணிகள் நிறைவு .டெல்லியில் மல்யுத்த வீரர்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு எதிரொலி- நாளை டெல்லி எல்லைகளுக்கு சீல்
Published on

தலைநகர் டெல்லியில் சுமார் ரூ.850 கோடி மதிப்பில் பிரமாண்ட பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.

இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந்தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

'சென்டிரல் விஸ்டா' என்ற திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பாராளுமன்ற கட்டிடப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி வருகிற 28-ந்தேதி (நாளை) புதிய பாராளுமன்றத்தை திறந்து வைக்கிறார்.

இதன் எதிரொலியால், நாளை டெல்லி மாநகர எல்லைகள் சீல் வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பாராளுமன்றம் திறக்கப்படும் நிலையில் இதுகுறித்து டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், டெல்லியில் மல்யுத்த வீரர்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com