என் மலர்
இந்தியா

நான் காந்தி, நேரு, ராஜிவ் காந்தியை பின்பற்றுபவன்: ராகுல் காந்தியை அல்ல- மணி சங்கர் அய்யர்
- ராகுல் காந்தி என்னை விட 30 வயது இளையவர்.
- அவருடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காதபோது, நான் எப்படி 'ராகுலியன்' ஆவேன் என்று எதிர்பார்க்க முடியும்?
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணி சங்கர் அய்யர், மற்ற காங்கிரஸ் கட்சி தலைவர்களை கடுமையான விமர்சனம் செய்து வருகிறார். சமீபத்தில் வேணுகோபால் ரவுடி எனக் கூறியிருந்தார். சசி தரூர் பாகிஸ்தானுக்கு எதிரானவர். இவர் வெளியுறவுத்துறை மந்திரி பதவியை விரும்புகிறார். கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ராகுலியன் இல்லை என்று மணி சங்கர் அய்யர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மணி சங்கர் அய்யர் கூறியதாவது:-
நான் காந்தியன் (காந்தி கொள்கையை பின்பற்றுபவன்), நேருவியன். ராஜிவியன். ஆனால் ராகுலியன் அல்ல. ஏனென்றால் அவர் என்னைவிட மிகவும் இளமையானவர். எனது அரசியல் வாழ்க்கையில் என்னிடம் இருந்து மிகத் தொலைவில் இருக்கிறார்.
நான் இந்திராவியன் (இந்திராகாந்தி கொள்கைளை பின்பற்றுபவன்) என்று சொல்லமாட்டேன். ஏனென்றால் எமர்ஜென்சியை அறிவித்து ஜனநாயகத்தை கொடுங்கோன்மையாக இந்திராகாந்தி மாற்றிய நான் முற்றிலுமாக ஏற்கவில்லை.
ராகுல் காந்தி என்னை விட 30 வயது இளையவர். அவருடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காதபோது, நான் எப்படி 'ராகுலியன்' ஆவேன் என்று எதிர்பார்க்க முடியும்?
இவ்வாறு மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.






