search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வீட்டில் உட்கார்ந்து கட்டுரைகள் எழுத வேண்டும்: உத்தவ் தாக்கரேவை கிண்டல் செய்த பட்னாவிஸ்
    X

    வீட்டில் உட்கார்ந்து கட்டுரைகள் எழுத வேண்டும்: உத்தவ் தாக்கரேவை கிண்டல் செய்த பட்னாவிஸ்

    • நான் அதை செய்தேன். முதல்வராக இருந்திருந்தால் இதை செய்திருப்பேன் என சொல்லி கொண்டிருக்கிறார்.
    • முதல்வராக இருந்த இரண்டரை ஆண்டு காலங்களில் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

    இரண்டரை வருடமாக ஆட்சியில் இருந்தபோது மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான உத்தவ் தாக்கரே வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அவர் வீட்டில் உட்கார்ந்து கட்டுரை எழுத வேண்டும் என பா.ஜனதா தலைவரும் அம்மாநிலத்தின் துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் கிண்டல் செய்துள்ளார்.

    இதுகுறித்து தேவேந்திர பட்நாவிஸ் கூறுகையில் "நான் பறவையாக இருந்தால், நான் கிரிக்கெட்ராக இருந்தால் இப்படி நாம் சில நேரங்களில் கட்டுரைகள் எழுதுவோம். அதேபோன்று ஒரு நபர் இந்த மாநிலத்தில் உள்ளார். நான் அதை செய்தேன். முதல்வராக இருந்திருந்தால் இதை செய்திருப்பேன் என அவர் சொல்லி கொண்டிருக்கிறார். அவர் முதல்வராக இருந்த இரண்டரை ஆண்டு காலங்களில் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

    அவர் வீட்டிலேயே உட்கார்ந்து கட்டுரை எடுத வேண்டும். நாங்கள் மக்களுக்கான சேவை செய்வோம்" என்றார்.

    Next Story
    ×