என் மலர்tooltip icon

    இந்தியா

    உணவு ருசியாக இல்லை என்று கூறியதால் திருமண விழாவில் வாலிபர் சுட்டுக்கொலை- மணமகளின் உறவினர் ஆத்திரம்
    X

    உணவு ருசியாக இல்லை என்று கூறியதால் திருமண விழாவில் வாலிபர் சுட்டுக்கொலை- மணமகளின் உறவினர் ஆத்திரம்

    • மணமகளின் வீட்டில் நடந்த இந்த விழாவில் பங்கேற்பதற்காக, மணமகனின் உறவினர் அருண்குமார் என்ற வாலிபர் சென்றார்.
    • ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    திருமணம் என்றாலே விருந்து உபசரிப்புக்குதான் அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். இன்னார் வீட்டு திருமணத்தில் சாப்பிட்டோம், சாப்பாடு பிரமாதம் என்று உறவினர்கள் கூறுவதை கேட்டு திருமண வீட்டார் மகிழ்ச்சி அடைவார்கள்.

    அதே சமயம் சாப்பாடு ருசியாக இல்லை என்றால், 'பல லட்சம் ரூபாய் செலவு பண்ணி சாப்பாடு ஒழுங்காக இல்லையே' என்று குறைபட்டு கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

    ஆனால் திருமண விருந்து பிரச்சனை, கொலையில் முடிந்திருப்பது அதிர்ச்சி தரக்கூடியதுதான். உத்தரபிரதேசத்தில்தான் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

    உத்தரபிரதேசத்தின் காஸ்கன்ஜ் மாவட்டம் சஹாவர் பகுதியில் திருமண விழா நடந்தது. மணமகளின் வீட்டில் நடந்த இந்த விழாவில் பங்கேற்பதற்காக, மணமகனின் உறவினர் அருண்குமார் என்ற வாலிபர் சென்றார்.

    உறவினர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது. இதனை சாப்பிட்ட அருண்குமார், 'சாப்பாடு ருசியாக இல்லை. சரியாக வேகவில்லை. தரமாகவும் இல்லை' என்று குறை கூறினார். இது மணமகள் வீட்டாருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

    ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது அங்கு வந்த மணமகளின் மாமா விஜயகுமார் என்பவர், ஆத்திரத்தில் துப்பாக்கியை எடுத்து அருண்குமாரை நோக்கி சரமாரியாக சுட்டார்.

    இதில் தலையில் குண்டு பாய்ந்த அவர் ரத்தவெள்ளத்தில் சரிந்தார். கொண்டாட்டமாக இருக்க வேண்டிய திருமண வீடு, கொலைக்களமாக மாறியதால், உறவினர்களும், நண்பர்களும் அதிர்ச்சியில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சிலர் குண்டு பாய்ந்த விஜயகுமாரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதனையடுத்து வாலிபரை சுட்டுக்கொன்ற விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×