என் மலர்tooltip icon

    இந்தியா

    Farooq Abdullah | கடவுள்தான் என்னை காப்பாற்றினார்: பரூக் அப்துல்லா உருக்கம்
    X

    Farooq Abdullah | கடவுள்தான் என்னை காப்பாற்றினார்: பரூக் அப்துல்லா உருக்கம்

    • ஜம்முவில் பரூக் அப்துல்லா மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
    • இதில் பரூக் அப்துல்லா அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.

    ஜம்மு:

    தேசிய மாநாட்டுக் கட்சியை சேர்ந்த பி.எஸ்.சவுகானின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஜம்முவில் நேற்று முன்தினம் நடந்தது.

    இதில், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, துணை முதல் மந்திரி சுரீந்தர் சவுத்ரி கலந்து கொண்டனர்.

    அவர்கள் திருமண மண்டபத்தில் இருந்து வெளியே நடந்து வந்தபோது, திடீரென ஒருவர் துப்பாக்கியால் பரூக் அப்துல்லாவை சுட்டார்.

    இதைக்கண்ட பாதுகாப்பு படை வீரர் அந்த நபரை கீழே தள்ளி துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இதில் அப்துல்லா மயிரிழையில் உயிர் தப்பினார்.

    அந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து கைதுசெய்தனர். விசாரணையில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் ஜம்முவை சேர்ந்த கமல் சிங் ஜாம்வால் என்பதும், கடந்த 20 ஆண்டாக பரூக் அப்துல்லாவை கொல்ல திட்டமிட்டதும் தெரிய வந்தது.

    பரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில், துப்பாக்கிச்சூடு பற்றி பரூக் அப்துல்லா கூறுகையில், நான் நலமுடன் இருக்கிறேன். கடவுள் என்னைக் காப்பாற்றி விட்டார் என உருக்கமாகத் தெரிவித்தார்.

    Next Story
    ×