search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ககன்யான் சோதனை ஓட்டம் தள்ளிவைப்பு: இஸ்ரோ தலைவர் தகவல்
    X

    ககன்யான் சோதனை ஓட்டம் தள்ளிவைப்பு: இஸ்ரோ தலைவர் தகவல்

    • மோசமான வானிலை காரணமாக சோதனை ஓட்டம் தாமதம் ஆனதாக தகவல் வெளியானது.
    • சோதனை ஓட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடா்ந்து விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

    இதற்காக ககன்யான் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தின் கீழ் தரையில் இருந்து 400 கி.மீ. தொலைவுள்ள புவிதாழ் வட்டப்பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரா்களை அனுப்பி, அவா்களை மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாகத் திருப்பி அழைத்து வர இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

    இந்தத் திட்டத்தை 2025-ம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக 3 கட்ட பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    இதற்காக கவுண்ட்டவுன் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்தச் சோதனைக்கு டிவி-டி1 என்ற ஒற்றை பூஸ்டா் திறன் கொண்ட ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. பூமியில் இருந்து புறப்பட்டு சுமாா் 17 கி.மீ. உயரத்தில் ராக்கெட் சென்றதும் மாதிரி கலன் தனியாக பிரிந்துவிடும். அது பாராசூட்கள் மூலம் மெதுவாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள வங்கக்கடல் பகுதியில் பாதுகாப்பாக இறக்கப்படும்.

    அதன்படி, மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் கலன் சோதனை ஓட்டம் இன்று காலை 8 மணிக்கு தொடங்க இருந்த நிலையில், 8.30 மணிக்கு தாமதமாக சோதனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. 8.30 மணிக்கு தாமதமாக தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் தாமதமானது.

    மோசமான வானிலை காரணமாக சோதனை ஓட்டம் தாமதம் ஆனதாக தகவல் வெளியானது. மீண்டும் 8.45 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

    பின்னர் 3வது முறையாக கவுண்ட்டவுன் நிறுத்தப்பட்டது. அப்போது சோதனை ஓட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ககன்யான் திட்டத்திற்கான முதல்கட்ட சோதனை ஓட்டம் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், என்ஜின் கோளாறு காரணமாக சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டது. திட்டமிட்டபடி என்ஜின் செயல்படாததால் ராக்கெட்டை ஏவ முடியவில்லை. விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து ஆய்வு செய்வோம் என்று கூறினார்.

    Next Story
    ×