என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ஜனாதிபதி திரவுபதி முர்மு 16-ந்தேதி 2 நாள் சுற்றுப்பயணமாக கேரளா வருகை
Byமாலை மலர்11 March 2023 3:54 AM GMT
- மாதா அமிர்தானந்தமயி தேவியை சந்தித்து ஆசி பெறுகிறார்.
- கவடியாரில் நடைபெறும் பெண்கள் விழாவில் கலந்து கொள்கிறார்.
திருவனந்தபுரம் :
ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 16-ந்தேதி 2 நாள் சுற்றுப்பயணமாக கேரளா வருகிறார். அதன்படி 16-ந்தேதி அன்று மதியம் 1.30 மணிக்கு கொச்சி வருகிறார். அங்கு ஐ.என்.எஸ். விக்ராந்த் போர் கப்பலை பார்வையிடுகிறார். தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு ஐ.என்.எஸ். துரோனாச்சார்யா போர்க்கப்பலில் வைத்து நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
அங்கிருந்து திருவனந்தபுரம் வரும் அவர் இரவு திருவனந்தபுரத்தில் ஓய்வு எடுக்கிறார். மறுநாள்(17-ந்தேதி) காலை 9.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கொல்லம் அமிர்தானந்தமயி மடத்துக்கு சென்று மாதா அமிர்தானந்தமயி தேவியை சந்தித்து ஆசி பெறுகிறார்.
பின்னர் திருவனந்தபுரம் திரும்பும் அவர், மதியம் கவடியாரில் நடைபெறும் பெண்கள் விழாவில் கலந்து கொள்கிறார். இதையடுத்து பிற்பகலில் லட்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X