பதஞ்சலி விளம்பரத்துக்கு தடை- டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிராக டாபர் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.வழக்கு மீதான விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
பதஞ்சலி விளம்பரத்துக்கு தடை- டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிராக டாபர் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பிய பிறகும் கூட ஒரே வாரத்தில் 6,182 விளம்பரங்களை டாபர் நிறுவனத்திற்கு எதிராக வெளியிட்டதாக பதஞ்சலி மீது குற்றம்சாட்டியது.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்தது.

அப்போது, டாபர் நிறுவனத்தின் லேகியத்தை அவதூறாகச் சித்தரிக்கும் வகையில் விளம்பரம் வெளியிடக் கூடாது எனவும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com