என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி மாநகராட்சி தேர்தல்: காங். வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த தமிழக எம்.பி.க்கள்
    X

    டெல்லி மாநகராட்சி தேர்தல்: காங். வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த தமிழக எம்.பி.க்கள்

    • திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமாருடன் இணைந்து, விஜய் வசந்த் எம்.பி. பிரசாரம் மேற்கொண்டார்.
    • கடந்த தேர்தலில் பாஜக டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியிருந்தது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் வரும் 4ந் தேதி (நாளை) மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் கடந்த சில தினங்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். நேற்று இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்றது.

    காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமாருடன் இணைந்து, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பிரசாரம் மேற்கொண்டார். ஆர். கே. புரம், நானக் புரம் ஆகிய பகுதிகளில்

    தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதிகளில் மக்களை சந்தித்து உரையாடி பிரசாரம் மேற்கொண்டார்கள்.

    மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கான இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தி உள்ளன. கடந்த தேர்தலில் பாஜக மாநகராட்சியை கைப்பற்றியிருந்தது. தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்தது. வரும் 7ம் தேதி வாக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    Next Story
    ×