என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு: கனமழையால் வீடு தரைமட்டம்- ஐந்து பேர் பலி?
- கனமழை பெய்ததால் வீடுகளில் வெள்ளம் புகுந்தது
- இமாச்சல பிரதேசத்தில் கனமழை காரணமாக 231 பேர் உயிரிழந்துள்னர்
இமாச்சல பிரதேசத்தில கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவு சிர்மாயுர் மாவட்டத்தில் உள்ள போயன்ட்டா பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டு பேய்மழை பெய்தது. இதனால் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
மலாகி கிராமத்தில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதில் ஒரு வீடு இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் வசித்த ஐந்து பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இமாச்சல பிரதேசத்தில் இன்று முதல் ஞாயிறு வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் இதுவரை கனமழை தொடர்பான விபத்தில் 231 பேர் உயிரிழந்துள்ளனர். 6731 கோடி ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் 190 சாலைகள் மூடப்பட்டுள்ளது.
#WATCH | Himachal Pradesh | Water flow of Giri River increases after a cloudburst in Sirmour (09/08) pic.twitter.com/1SjCG4J13B
— ANI (@ANI) August 9, 2023
கனமழை காரணமாக ஆறுகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் நிலச்சரிவு, மண்சரிவு போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்