என் மலர்
இந்தியா

நிலவில் நீர் இருப்பதற்கான புகைப்படத்தை அனுப்பிய சந்திரயான்-2 ஆர்பிட்டர்
- நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது.
- இதில் சந்திரயான்-2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கிறது.
புதுடெல்லி:
இந்திய விண்வெளி ஆய்வு கழகமான இஸ்ரோ கடந்த 2019-ம் ஆண்டு நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பியது. இதில் சந்திரயான்-2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அந்த ஆர்பிட்டர் நிலவில் நீர் இருக்கிறதா என்பதை ஆய்வுசெய்து வருகிறது.
இந்நிலையில், நிலவில் உள்ள நீர், பனிக்கட்டி மற்றும் மண்ணின் ரேடார் படங்களை சந்திரயான்-2 ஆர்பிட்டர் அனுப்பியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் நிலவைச் சுற்றி வரும் சந்திரயான்-2 ஆர்பிட்டர் சேகரித்து அனுப்பிய தகவல்களை ஆய்வு செய்ததில் நிலவில் நீர் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. இதன்மூலம் நிலவில் நீர் இருக்கும் இடம் பற்றிய வரைபடத்தை இஸ்ரோ தயாரித்திருக்கிறது.
அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள் இந்த வரைபடத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதற்காக இரட்டை அதிர்வெண் செயற்கை துளை ரேடார் (டி.எப்.எஸ்.ஏ.ஆர்) என்ற உயர் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் பயன்படுத்தி உள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 1,400 ரேடார் தரவுத்தொகுப்புகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.






