search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் இன்று 7 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
    X

    கேரளாவில் இன்று 7 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

    • இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
    • வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதி நடைபெறுகிறது.

    கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளுக்கு செப்டம்பர் 5-ம் தேதி (இன்று) இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    அவற்றின் வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் 8ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் உத்தர பிரதேசத்தின் கோசி தொகுதி எம்.எல்.ஏ. தாராசிங், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்ததால் அந்த இடம் காலியானது. மற்ற தொகுதிகளின் உறுப்பினர்கள் மறைவால் அந்த இடங்கள் வெற்றிடமானது.

    இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதி நடைபெறுகிறது.

    Next Story
    ×