என் மலர்tooltip icon

    இந்தியா

    ஐஐடி கரக்பூர் விடுதி அறையில் பி.டெக் மாணவர் தூக்கிட்டு தற்கொலை: ஜனவரியில் இருந்து 4ஆவது சம்பவம்..!
    X

    ஐஐடி கரக்பூர் விடுதி அறையில் பி.டெக் மாணவர் தூக்கிட்டு தற்கொலை: ஜனவரியில் இருந்து 4ஆவது சம்பவம்..!

    • இரவு சாப்பாட்டை முடித்து விட்டு, அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை.

    மேற்கு வங்க மாநிலம் ஐஐடி கரக்பூரில் பி.டெக். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் 4ஆவது ஆண்டு படித்து வந்த ரிதம் மொண்டல் (வயது 21) என்ற மாணவர், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 4ஆவது தற்கொலை சம்பவம் இதுவாகும்.

    விடுதியில் உள்ள ராஜேந்திர பிரசாத் ஹாலில் அமைந்துள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவர் கொல்கத்தாவை சேர்ந்தவர். நேற்றிரவு உணவை முடித்துக் கொண்டு, அவரது அறைக்கு சென்றுள்ளார். அப்போது அவரது நடத்தையில் எந்த அசாதாரணமும் தெரியவில்லை என விடுதியில் அவருடன் தங்கியுள்ள மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    ஐஐடி கேஜிபி அதிகாரி இது தொடர்பாக கூறுகையில், அவர் தங்கியிருந்த அறையில் கதவை தட்டினோம். ஆனால் திறக்கப்படவில்லை. இதனால் வளாகத்திற்கு வெளியில் உள்ள அவுட்போஸ்ட் போலீசாரை அழைத்து வந்து, விடுதி காவலர்களுடன் கதவை உடைத்து உள்ளே சென்றோம். அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி 3ஆம் வருட எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் மாணவர் ஷான் மாலிக் அவரது அறையில் தற்கொலை செய்து கொண்டார். ஏப்ரல் 20ஆம் தேதி ஓசேன் இன்ஜினீயரிங் பிரிவில் கடைசி வருடம் படித்து வந்த அனிகெட் வால்கர் தற்கொலை செய்து கொண்டார். மே 4ஆம் தேதி பி-டெக் 3ஆம் வருட மாணவர் ஆசிப் கமர் விடுமுறை அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

    மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால், அது தொடர்பாக கவுன்சிலிங் பெற ஒவ்வொரு விடுதி அறையிலும் பார் கோடு (Bar Codes) அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எந்த நேரம் ஆலோசனை தேவை என்றாலும் அதை பயன்படுத்துக் கொள்வதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×