என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ஐதராபாத்துக்கு நாளை வரும் பிரதமர் மோடிக்கு எதிரான விளம்பர பலகைகள்...
Byமாலை மலர்1 July 2022 2:03 AM GMT
- 3-ந்தேதி ஐதராபாத்தில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
- 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஐதராபாத் :
பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம், தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. அதில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை ஐதராபாத்துக்கு வருகிறார்.
கவர்னர் மாளிகையில் தங்குகிறார். 3-ந்தேதி மாலையில், ஐதராபாத்தில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அவரது வருகையையொட்டி, 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில், ''பை பை மோடி'' என்று எழுதப்பட்ட விளம்பர பலகைகளும், பேனர்களும் ஐதராபாத் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்டிருந்தன. அதிகாரிகள் அவற்றை அகற்றினர்.
பிரதமர் மோடி வருகையையொட்டி அவருக்கு எதிராக விளம்பர பலகைகள் வைக்கப்பட்டது ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X