search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் குற்றச்சாட்டு உண்மை என்றால் கடும் நடவடிக்கை: சித்தராமையா உறுதி
    X

    "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" கோஷம் குற்றச்சாட்டு உண்மை என்றால் கடும் நடவடிக்கை: சித்தராமையா உறுதி

    • மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சயீத் நசீர் ஹுசைன் வெற்றி.
    • அவரது ஆதரவாளர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்டதாக பா.ஜனதா குற்றச்சாட்டு.

    கர்நாடகா மாநிலத்தில் நான்கு மாநிலங்களவை இடம் காலியாக உள்ளது. நான்கு இடத்திற்கு காங்கிரஸ் தரப்பில் மூன்று பேரும், பா.ஜனதா- மதசார்பற்ற ஐக்கிய தளம் சார்பில் இருவரும் போட்டியிட்டதால் தேர்தல் நடத்தப்பட்டது.

    காங்கிரஸ் தரப்பில் நிறுத்தப்பட்ட மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். அவர்களில் ஒருவர் சயீத் நசீர் ஹுசைன். இவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் சட்டமன்ற வளாகத்தில் அவர்களுடைய ஆதரவாளர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பியதாக பா.ஜனதாவினர் குற்றஞ்சாட்டினர். மேலும், இது தொடர்பாக புகார் அளிக்க வேண்டும் என வற்புறுத்தினர். மேலும், கோஷம் எழுப்பியதற்கான ஆடியோ ஆதாரத்தையும் வழங்கினர்.

    சயீத் நசீர் ஹுசைன்

    இதனால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டது. சட்டமன்ற வளாகத்திற்குள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதாவினர் வலியுறுத்தினர்.

    இதனைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் சித்தராமையாக கூறுகையில் "நாங்கள் குரலை ஆடியோவை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். அறிக்கை வரும்போது, சிலர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கமிட்டது உண்மையாக இருந்தால், அந்த நபர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். அவர்களை காப்பாற்றும் என்ற கேள்விக்கே இடமில்லை" என்றார்.

    Next Story
    ×