என் மலர்
இந்தியா

ஒடிசா சட்டசபையை கலைக்க ஆளுநருக்கு மந்திரி சபை பரிந்துரை
- நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு கடந்த 2019-ம் ஆண்டு மே 29-ந்தேதி பதவி ஏற்றுக் கொண்டது.
- 2000-த்தில் இருந்து நவீன் பட்நாயக் ஒடிசா மாநில முதல்வராக இருந்து வருகிறார்
ஒடிசா மாநிலத்தில் மே 13-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை நான்கு கட்டங்களாக சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
நாளை வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. இந்த நிலையில் சட்டசபையை கலைக்க கவர்னருக்க அம்மாநில மந்திரிசபை பரிந்துரை செய்துளள்து.
பிஜு ஜனதா தளம் அரசின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. இதனால் சட்டசபையை கலைக்க பரிந்துரை செய்துள்ளது.
நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு கடந்த 2019-ம் ஆண்டு மே 29-ந்தேதி பதவி ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 2000-த்தில் இருந்து நவீன் பட்நாயக் ஒடிசா மாநில முதல்வராக இருந்து வருகிறர். ஐந்து முறை தொடர்ந்து முதல்வராக பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசியலமைப்பின்படி தேர்தல் முடிவுக்குப் பிறகு சட்டசபையை கலைக்க மந்திரி சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
Next Story






