search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காவிரி விவகாரம்- டெல்லியில் மத்திய அமைச்சருடனான சந்திப்பு ஒத்திவைப்பு
    X

    காவிரி விவகாரம்- டெல்லியில் மத்திய அமைச்சருடனான சந்திப்பு ஒத்திவைப்பு

    • டெல்லியில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    • காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என்றார்.

    தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிடுமாறு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் சந்தித்து இன்று கோரிக்கை மனு அளிக்க இருந்தனர்.

    இந்நிலையில், காவிரி விகாரம் தொடர்பாக இன்று மாலை நடைபெறுவதாக இருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டெல்லியில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:-

    காவிரி விவகாரம் தொடர்பாக இன்று மாலை சந்திப்பு நடைபெறுவதாக இருந்தது. சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, நாளை காலை 9 மணியளவில் மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் சந்திப்பு நடைபெறும்.

    காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் கூறுவதை கூட கர்நாடக ஏற்க மறுக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×