என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
திருப்பதி மலைப்பாதையில் விபத்துகளை தடுக்க கூடுதல் கேமராக்கள்
- மலை பாதையில் விபத்தை தடுக்க அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அலைமோதுகிறது.
திருப்பதி:
திருப்பதி மலைப்பாதையில் பக்தர்கள் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. கடந்த 2 மாதங்களில் அதிக விபத்துக்கள் நடந்தது.
இதனால் நேற்று மலை பாதையில் விபத்தை தடுக்க அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டு வேண்டுதல் நடத்தினர்.
திருப்பதியில் சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில், போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த மாவட்ட காவல்துறை முடிவு செய்துள்ளது.
மலைப்பாதையில் விபத்துகள் அதிகம் நடைபெறும் வளைவுகளில் அதிக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உள்ளனர். மேலும் இரவு நேரங்களில் சிக்னல் அளிக்கும் வகையில் சாலை வளைவுகளில் மிளிரும் விளக்குகள் பொருத்தப்பட உள்ளது.
கேமராக்கள் மூலம் அதிவேகமாக வாகன ஓட்டுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அலைமோதுகிறது. நேற்று 78,487 பேர் சாமி தரிசனம் செய்தனர். 38,213 பேர் முடிகாணிக்கை செலுத்தினர்.
நேரடி இலவச தரிசனத்தில் காத்திருப்பு அறைகளை தாண்டி ஒரு கிலோமீட்டர் மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். இன்று காலை சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரமானது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்