search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரூ.13 கோடியில் கட்டப்பட்ட பாலம்- திறப்பதற்கு முன்பே இடிந்து விழுந்ததால் பரபரப்பு
    X

    இடிந்து விழுந்த பாலம்

    ரூ.13 கோடியில் கட்டப்பட்ட பாலம்- திறப்பதற்கு முன்பே இடிந்து விழுந்ததால் பரபரப்பு

    • 2017ல் பணி முடிந்தாலும் அணுகுசாலை இல்லாததால் பாலம் திறக்கப்படவில்லை.
    • பாலத்தில் ஏற்பட்ட விரிசல் குறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

    பெகுசாய்:

    பீகார் மாநிலம் பெகுசாய் பகுதியில் உள்ள கந்தக் ஆற்றின் குறுக்கே 206 மீட்டர் நீளத்தில் 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு பாலம் கட்டும் பணி துவங்கி, 2017ல் முடிவடைந்தது. ஆனால், அணுகு சாலை இல்லாததால், பாலம் திறக்கப்படாமல் இருந்தது.

    நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்தப் பாலத்தின் முன்பகுதியில் விரிசல் ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை அந்த பாலத்தின் முன்பகுதி இடிந்து விழுந்தது. ரூ.13 கோடியில் கட்டப்பட்டு திறக்கப்படும் முன்பே பாலம் இடிந்து விழுந்தது பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×