என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி விருந்தினர் மாளிகையில் 8 அடி நீள பாம்பு புகுந்தது
    X

    திருப்பதியில் பிடிபட்ட மலைப்பாம்பு

    திருப்பதி விருந்தினர் மாளிகையில் 8 அடி நீள பாம்பு புகுந்தது

    • திருப்பதி தேவஸ்தான பாம்பு பிடிக்கும் ஒப்பந்த ஊழியர் பாஸ்கர் நாயுடுவுக்கு தகவல் தெரிவித்தனர்.
    • பிடிபட்ட 2 பாம்புகள் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டன.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே லட்சுமி நிவாசம் என்ற விருந்தினர் மாளிகை உள்ளது. தரிசனத்திற்கு வரும் சிறப்பு விருந்தினர்கள் இந்த விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்து தரிசனம் செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று இரவு லட்சுமி நிவாசம் விருந்தினர் மாளிகைக்குள் 8 அடி நீளம் உள்ள நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனைக் கண்ட விருந்தினர் மாளிகை ஊழியர்கள் ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான பாம்பு பிடிக்கும் ஒப்பந்த ஊழியர் பாஸ்கர் நாயுடுவுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை பிடித்தார்.

    அதே நேரத்தில் பாலாஜி நகரில் உள்ள குடியிருப்பில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இது குறித்து தகவல் அறிந்த பாலாஜி நாயுடு சம்பவ இடத்திற்கு சென்று மலைப்பாம்பை பிடித்தார்.

    பிடிபட்ட 2 பாம்புகள் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டன.

    Next Story
    ×