search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    6 வயது சிறுவன் நரபலி- 2 கட்டுமான தொழிலாளர்கள் கைது
    X

    6 வயது சிறுவன் நரபலி- 2 கட்டுமான தொழிலாளர்கள் கைது

    • மகனை காணாமல் தேடிய அவனுடைய தந்தை, கழுத்தறுப்பட்ட நிலையில் அவனை பிணமாக பார்த்து திடுக்கிட்டார்.
    • கட்டுமான தொழிலாளர்கள் தாங்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

    புதுடெல்லி:

    பீகாரை சேர்ந்தவர்கள் விஜய்குமார், அமர்குமார். இவர்கள் டெல்லியில் லோதி காலனியில் தங்கி, கட்டுமான தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். அதே இடத்தில் கட்டுமான தொழிலாளியாக உள்ள ஒருவருக்கு 6 வயதில் ஒரு மகன் இருந்தான்.

    நேற்று முன்தினம் இரவு சாப்பிட்ட பிறகு, அந்த சிறுவனை விஜய்குமாரும், அமர்குமாரும் சமையலறை பகுதிக்கு அழைத்தனர். அங்கு வந்த அவனை தலையில் தாக்கினர். பிறகு அவனது கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தனர். அப்போது அவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தி இருந்தனர்.

    மகனை காணாமல் தேடிய அவனுடைய தந்தை, கழுத்தறுப்பட்ட நிலையில் அவனை பிணமாக பார்த்து திடுக்கிட்டார். அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், விஜய்குமாரும், அமர்குமாரும் கைது செய்யப்பட்டனர்.

    தாங்கள் கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர். போதைப்பொருள் சாப்பிட்டவுடன், பணம் குவிக்க நரபலி கொடுக்க வேண்டும் என்ற தவறான நம்பிக்கை உண்டாகி, இந்த கொலையை செய்ததாக அவர்கள் கூறினர்.

    Next Story
    ×