search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    4வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: மதியம் 1 மணி நிலவரப்படி 40.32 சதவீத வாக்குப்பதிவு
    X

    4வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: மதியம் 1 மணி நிலவரப்படி 40.32 சதவீத வாக்குப்பதிவு

    • முதல் கட்டமாக 102 தொகுதிக்கும், 2-வது கட்டமாக 88 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் வாக்குப்பதிவு நடந்தது.
    • மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது.

    மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

    இதற்கிடையே, 4-வது கட்டமாக 96 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் 4வது கட்ட தேர்தலில் 1717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி 40.32 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல், ஆந்திராவில் 40.26 சதவீதமும், ஒடிசாவில் 39.30 சதவீத வாக்குகளும் பதிவாகின.

    Next Story
    ×