search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அசாதுதீன் ஓவைசி
    X
    அசாதுதீன் ஓவைசி

    இந்தியா திராவிடர்களுக்கு, ஆதிவாசிகளுக்கு சொந்தமானது- அசாதுதீன் ஓவைசி பேச்சு

    பாஜக, ஆர்.எஸ்.எஸ்.ஆகியவை முகலாயர்களுக்கு பின்னர் வந்தவை என்று ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
    மகாராஷ்டிரா மாநிலம் பாய்வாடியில் நடைபெற்ற, அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவரும், ஐதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி பேசியதாவது:

    இந்தியா என்னுடையதோ, தாக்கரேவின் உடையதோ, மோடியுடையதோ, அமித்ஷாவினுடையதோ அல்ல. 

    இந்தியா யாருக்காவது சொந்தமென்றால் அது திராவிடர்களுக்கும் , ஆதிவாசிகளுக்கும்தான். பாஜக - ஆர்.எஸ்.எஸ். ஆகியவை முகலாயர்களுக்கு பின்னர் வந்தவை.  

    ஆப்ரிக்கா, ஈரான், மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வந்த பின்னரே இந்தியா உருவானது.

    மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், பா.ஜ.க., சிவசேனா வெற்றி பெறுவதை தடுத்து நிறுத்த, ஒவைசிக்கு ஓட்டு போடும்படி, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். தேர்தலுக்கு பின்னர் சிவசேனாவை தேசியவாத காங்கிரஸ் திருமணம் செய்து கொண்டது. 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×