என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
விசா முறைகேடு விவகாரம்- கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்கு
Byமாலை மலர்25 May 2022 8:33 AM GMT (Updated: 25 May 2022 8:33 AM GMT)
விசா முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் இன்று மாலை சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக உள்ள நிலையில்தான் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து இருக்கிறது.
புதுடெல்லி:
சீனாவை சேர்ந்த 263 பேர்களுக்கு முறைகேடாக விசா வழங்குவதற்கு ரூ.50 லட்சம் லஞ்சம் பெறப்பட்டதாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
இதுதொடர்பாக சென்னை, டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் சி.பி.ஐ. சோதனையும் நடத்தியது.
இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விசா முறைகேடு விவகாரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கார்த்தி சிதம்பரம் விளக்கம் அளித்து உள்ளார்.
இந்தநிலையில் விசா முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை இன்று வழக்கு பதிவு செய்துள்ளது. அடுத்த கட்டமாக அவர் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பவும் திட்டமிட்டு உள்ளது.
சீனாவை சேர்ந்த 263 பேர்களுக்கு முறைகேடாக விசா வழங்குவதற்கு ரூ.50 லட்சம் லஞ்சம் பெறப்பட்டதாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
இதுதொடர்பாக சென்னை, டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் சி.பி.ஐ. சோதனையும் நடத்தியது.
இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விசா முறைகேடு விவகாரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கார்த்தி சிதம்பரம் விளக்கம் அளித்து உள்ளார்.
இந்தநிலையில் விசா முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை இன்று வழக்கு பதிவு செய்துள்ளது. அடுத்த கட்டமாக அவர் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பவும் திட்டமிட்டு உள்ளது.
விசா முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் இன்று மாலை சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக உள்ள நிலையில்தான் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X