என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
நடுவானில் பழுதடைந்த ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜின் - பாதுகாப்பாக தரையிறக்கிய விமானி
Byமாலை மலர்20 May 2022 8:10 AM GMT (Updated: 20 May 2022 10:26 AM GMT)
அதிக வெளியேற்ற வாயு வெப்பநிலை காரணமாக இன்ஜின் பழுதடைந்ததாக கூறப்படுகிறது.
மும்பை:
ஏர்பஸ் ஏ320நியோ என்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று பெங்களூர் செல்வதற்காக மும்பை விமான நிலையத்தில் இருந்து கிளம்பியது.
பறக்கத்தொடங்கிய 27 நிமிடங்களில் அந்த விமானத்தின் இன்ஜின் திடீரென்று பழுதடைந்து நின்றுவிட்டது. நிலைமையை சுதாரித்த
விமானி, விமானத்தை பாதுகாப்பாக மும்பை விமான நிலையத்திலேயே தரையிறக்கினார்.
இதையடுத்து அந்த விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வேறு ஏர் இந்தியா விமானத்தில் பெங்களூருவுக்கு அனுப்பி
வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து விமானப் சிவில் விமானப் போக்குவரத்தின் ஒழுங்குமுறை இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது.
அதிக வெளியேற்ற வாயு வெப்பநிலை காரணமாக இன்ஜின் பழுதடைந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஏர் இந்தியா கூறுகையில், நாங்கள் பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குகிறோம்.
எங்கள் பணியாளர்கள் இதுபோன்ற பிரச்சனைகளை சிறப்பாக கையாள நன்கு பயின்றவர்கள். எங்கள் பணியளர்கள் இந்த சம்பவம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர் என தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X