என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
நாடு முழுவதும் 2 ஆயிரம் ரெயில் நிலையங்களில் 65 ஆயிரம் டிஜிட்டல் திரை- ரெயில்வே நிர்வாகம் அமைக்கிறது
புதுடெல்லி:
நாடு முழுவதும் உள்ள 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்களில் நாள்தோறும் 2.2 கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கின்றனர்.
இந்த நிலையில் ரெயில்களின் நேரம், ரெயில்கள் இயங்கும் நிலை மற்றும் பயணிகள் முழு விவரம் போன்றவற்றை அறிந்து கொள்வதற்காக ரெயில் நிலையங்களில் டிஜிட்டல் தொடுதிரையை ரெயில்வே நிர்வாகம் அமைக்கிறது.
நாடு முழுவதும் 2 ஆயிரம் ரெயில் நிலையங்களில் 65 ஆயிரம் டிஜிட்டல் டிஸ்பிளே ஸ்கிரீன்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய பொதுத்துறை நிறுவனமான ரெயில்டெல் நிறுவனத்திடம் இந்த மெகா திட்டத்தை நிறைவேற்றும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ரெயில் நிலையங்களில் உள்ள நடை மேம்பாலம், பிளாட்பாரங்கள், காத்திருக்கும் அறை, பரந்த அகன்ற இடைவெளி இடம் ஆகியவற்றில் இந்த டிஜிட்டல் திரை வைக்கப்படுகிறது.
ஏ1, ஏ, பி, மற்றும் சி என்ற அனைத்து வகையான ரெயில் நிலையங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்