என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
டெல்லி விமான நிலையத்தில் ரூ.7½ கோடி தங்கம் சிக்கியது
Byமாலை மலர்29 March 2022 5:35 AM GMT (Updated: 29 March 2022 5:35 AM GMT)
டெல்லி விமான நிலையத்தில் ரூ.7½ கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் 2 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி:
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வருவதை தடுக்க விமான நிலையங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. டெல்லி சர்வேதேச விமான நிலையத்தில் நைரோபியாவில் இருந்து வந்த 2 கென்யா பயணிகளின் உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது அவர்கள் 15.57 கிலோ எடையுள்ள தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 19 தங்க கட்டிகளும் அடங்கும். இதன் மொத்த மதிப்பு ரூ.7 கோடியே 50 லட்சம் ஆகும். இதுதொடர்பாக 2 பேரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் அதில் ஒருவர் இதேபோன்று 4 அல்லது 5 முறை தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்தது தெரிய வந்தது. மற்றொருவர் முதன்முறையாக இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார்.
அவர்கள் எங்கிருந்து தங்கத்தை கடத்தி வந்தார்கள் என்பது பற்றி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் 2 பேரும் கைது செய்யப்படுவார்கள் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சமீப காலத்தில் டெல்லியில் அதிக அளவு தங்கம் சிக்கியுள்ளது இப்போது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வருவதை தடுக்க விமான நிலையங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. டெல்லி சர்வேதேச விமான நிலையத்தில் நைரோபியாவில் இருந்து வந்த 2 கென்யா பயணிகளின் உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது அவர்கள் 15.57 கிலோ எடையுள்ள தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 19 தங்க கட்டிகளும் அடங்கும். இதன் மொத்த மதிப்பு ரூ.7 கோடியே 50 லட்சம் ஆகும். இதுதொடர்பாக 2 பேரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் அதில் ஒருவர் இதேபோன்று 4 அல்லது 5 முறை தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்தது தெரிய வந்தது. மற்றொருவர் முதன்முறையாக இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார்.
அவர்கள் எங்கிருந்து தங்கத்தை கடத்தி வந்தார்கள் என்பது பற்றி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் 2 பேரும் கைது செய்யப்படுவார்கள் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சமீப காலத்தில் டெல்லியில் அதிக அளவு தங்கம் சிக்கியுள்ளது இப்போது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X