என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணி... நொடிப்பொழுதில் காப்பாற்றிய ஆர்.பி.எப். வீரர்
Byமாலை மலர்13 March 2022 12:51 PM GMT (Updated: 13 March 2022 12:51 PM GMT)
பயணிகள் ஓடும் ரெயிலில் ஏற வேண்டாம், இறங்க வேண்டாம் என ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மும்பை:
மும்பையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை, ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றி உள்ளார்.
மும்பை வடாலா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற பயணிகள் ரெயில் சற்று வேகமெடுத்தபோது, ஒரு பயணி ஓடிச் சென்று ஏறினார். ஆனால், அவர் திடீரென தடுமாறி பிளாட்பாரத்தில் விழுந்தார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரர், நொடிப்பொழுதில் ஓடிச் சென்று அந்த பயணியை வெளியே இழுத்தார். இதனால் அந்த பயணி அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார். இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகின. இந்த வீடியோவை மத்திய ரெயில்வே தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பொதுமக்களுக்கு அறிவுறுத்தலை வழங்கி உள்ளது.
Timely act of RPF constable Netrapal Singh, saved the life of a passenger who slipped and fell down while boarding the running local train at Vadala station. @drmmumbaicr
— Central Railway (@Central_Railway) March 13, 2022
Passengers are requested not to board/de-board a moving train.@RailMinIndiapic.twitter.com/EWADfwwpMW
‘வடாலா ரெயில் நிலையத்தில் ஓடும் உள்ளூர் ரெயிலில் ஏறும் போது தவறி கீழே விழுந்த ஒரு பயணியின் உயிரை ஆர்பிஎப் கான்ஸ்டபிள் நேத்ரபால் சிங் சரியான நேரத்தில் காப்பாற்றினார். பயணிகள் ஓடும் ரெயிலில் ஏற வேண்டாம், இறங்க வேண்டாம்’ என ரெயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X