என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகிய விமானம்- பயணிகள் பீதி
Byமாலை மலர்12 March 2022 12:28 PM GMT (Updated: 12 March 2022 12:28 PM GMT)
விமானம் புல்தரையில் நின்றுவிட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ஜபல்பூர்:
டெல்லியில் இருந்து அலையன்ஸ் ஏர் பயணிகள் விமானம், 55 பயணிகளுடன் மத்திய பிரதேசம் ஜபல்பூர் நகருக்கு புறப்பட்டது. இன்று மதியம் விமானம் ஜபல்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை விட்டு விலகியது. விமானம் ஓடுபாதையில் இருந்து 10 மீட்டர் தொலைவிற்கு வெளியே சென்றுவிட்டது. இதனால் பயணிகள் அனைவரும் பீதியடைந்தனர்.
ஆனால், விமானம் புல்தரையில் நின்றுவிட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
நடந்த சம்பவம் குறித்து அலையன்ஸ் ஏர் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X