என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
நான் முதலமைச்சரானாலும் அது என் தலைக்கு ஏறாது- பகவந்த் மான்
Byமாலை மலர்9 March 2022 11:42 AM GMT (Updated: 9 March 2022 11:42 AM GMT)
பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தால் பஞ்சாபை அதன் பழைய பெருமைக்கே மீட்டெடுப்பேன் என்று ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 5 மாநில தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற இருக்கிறது.
வாக்கு எண்ணிக்கை முடிவில் 5 மாநிலங்களிலும் ஆட்சியை தக்க வைக்கப்போவது யார் என்றும், புதிய ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்றும் தெரிந்துவிடும். இதனால், வாக்கு எண்ணிக்கையை தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
இந்நிலையில், பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தால் பஞ்சாபை அதன் பழைய பெருமைக்கே மீட்டெடுப்பேன் என்று ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
கருத்துக் கணிப்பு குறித்து பகவந்த் மான் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறப்பட்டுள்ளதாவது:-
என்னைப் பொறுத்தவரையில், சி எம் (முதல்- அமைச்சர்) என்றால் காமன் மேன் (சாமானியர்) என்று அர்த்தம். நான் முதலமைச்சரானாலும் அது என் தலைக்கு ஏறாது. உயர் பதவி கிடைத்தாலும் அதில் நீடிப்பேன்.
புகழ் எப்போதும் என் வாழ்வின் ஒரு பகுதியாகும். நான் மக்கள் மத்தியில் சென்று அவர்களுக்காக அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன். அது எனக்கு ஒன்றும் புதிதல்ல.
எனது பஞ்சாப் என்பது பஞ்சாபின் கனவுகள். மக்கள் பழைய பஞ்சாபை திரும்ப விரும்புகிறார்கள். பஞ்சாபை அதன் பழைய பெருமைக்கு மீட்டெடுப்பேன். நாங்கள் பஞ்சாபை மீண்டும் பஞ்சாப்பாக ஆக்குவோம். அதை பாரிஸ், லண்டன் அல்லது கலிபோர்னியாவாக மாற்ற வேண்டிய அவசியமில்லை. அது பிற கட்சிகளின் கனவு. அவர்கள் தோற்றுப் போகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. கோகுல்ராஜ் கொலை வழக்கு: 5 பேர் விடுதலைக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யவேண்டும்- திருமாவளவன் கோரிக்கை
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X