என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கேரளாவில் சப்-இன்ஸ்பெக்டரான ஆதிவாசி பெண் - தந்தையின் கனவை நனவாக்கியதாக உருக்கம்
Byமாலை மலர்11 Feb 2022 6:58 AM GMT (Updated: 11 Feb 2022 6:58 AM GMT)
சப்-இன்ஸ்பெக்டர் ஆகவேண்டும் என்பது என் தந்தையின் கனவு எனவும் அதனை நான் நிறைவேற்றிய போது அவர் உயிருடன் இல்லை எனவும் ஆதிவாசி பெண் உருக்கமாக கூறினார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் உள்ள மலை கிராமத்தை சேர்ந்தவர் உண்ணி செக்கன்.
உண்ணி செக்கன் பால பிலி, எலிகோ பழங்குடி காலனியில் வசித்து வந்தார். இவரது மகள் சவுமியா. மகள் கேரள போலீஸ் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணியில் சேர வேண்டும் என விரும்பினார். தனது விருப்பத்தை மகளிடமும் கூறிவந்தார்.
இந்த நிலையில் உண்ணி செக்கன் கடந்த ஆண்டு இறந்து போனார். தந்தை இறந்த பின்பு அவரது கனவை நிறைவேற்ற மகள் சவுமியா கடும் முயற்சி மேற்கொண்டார்.
அதன் பயனாக அவர் கேரள போலீஸ் அகாடமியில் சேர்ந்து சிறப்பான பயிற்சி பெற்றார். உரிய பயிற்சிகளை முடித்ததும் அவர் சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு பெற்றார்.
தற்போது அவர் சப்-இன்ஸ்பெக்டர் சீருடை அணிந்து தனது கிராமத்துக்கு சென்றார். இதுபற்றி சவுமியா கூறும்போது, நான் சப்-இன்ஸ்பெக்டர் ஆகவேண்டும் என்பது என் தந்தையின் கனவு. அதனை நான் நிறைவேற்றிய போது அவர் உயிருடன் இல்லை என்று உருக்கமாக கூறினார். சவுமியாவை அவரது பழங்குடி கிராம மக்கள் பாராட்டினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X