என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னாவின் ஆடியோ பதிவு குறித்து சி.பி.ஐ. விசாரணை
Byமாலை மலர்10 Feb 2022 5:36 AM GMT (Updated: 10 Feb 2022 5:36 AM GMT)
கேரளாவில் தங்க கடத்தல் வழக்கை விசாரித்து வரும் அமலாக்க துறை ஸ்வப்னாவின் ஆடியோ குறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு கடந்த 2019-ம் ஆண்டு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை, சுங்க துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் தூதரக முன்னாள் ஊழியர் மற்றும் ஸ்வப்னா சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்வப்னாவுடன் தொடர்பில் இருந்ததாக கேரள மாநில மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி சிவசங்கரும் கைதானார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் தனது சுயசரிதையை புத்தகமாக வெளியிட்டார். அதில் ஸ்வப்னா பற்றி பல தகவல்களை கூறியிருந்தார்.
இதற்கிடையே ஸ்வப்னாவும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வெளியே வந்த அவர் இந்த வழக்கில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனை சிக்க வைக்க முயற்சி நடந்ததாக கூறியிருந்தார். இது தொடர்பான ஆடியோ வெளியானதை அடுத்து கேரள அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வரும் அமலாக்க துறை ஸ்வப்னாவின் ஆடியோ குறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக கொச்சியில் உள்ள அமலாக்க துறையின் இணை இயக்குனர் டெல்லி தலைமையகத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு கடந்த 2019-ம் ஆண்டு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை, சுங்க துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் தூதரக முன்னாள் ஊழியர் மற்றும் ஸ்வப்னா சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்வப்னாவுடன் தொடர்பில் இருந்ததாக கேரள மாநில மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி சிவசங்கரும் கைதானார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் தனது சுயசரிதையை புத்தகமாக வெளியிட்டார். அதில் ஸ்வப்னா பற்றி பல தகவல்களை கூறியிருந்தார்.
இதற்கிடையே ஸ்வப்னாவும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வெளியே வந்த அவர் இந்த வழக்கில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனை சிக்க வைக்க முயற்சி நடந்ததாக கூறியிருந்தார். இது தொடர்பான ஆடியோ வெளியானதை அடுத்து கேரள அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வரும் அமலாக்க துறை ஸ்வப்னாவின் ஆடியோ குறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக கொச்சியில் உள்ள அமலாக்க துறையின் இணை இயக்குனர் டெல்லி தலைமையகத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X