search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கான நிதி 25 சதவீதம் குறைப்பு..!!

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
    மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் கோடிக்கணக்கான ஏழை மக்கள் 100 நாட்கள் வேலைப்பெற்று, தங்களது வாழ்வாதாரத்தை கழித்து வருகிறார்கள். கிராமப்புறத்தில் மிகவும் ஏழ்மையான பெண்களுக்கு இந்த வேலை வாய்ப்பு திட்டம் மிகவும் கைக்கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதியில் 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

    2021-2022-ம் நிதியாண்டில் 98 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது 2022-23-ம் நிதியாண்டில் 73 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 25 சதவீதம் குறைவாகும்.


    73 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2020-2021 நிதியாண்டில் செலவு செய்ததை விட சுமார் 34 சதவீதம் குறைவாகும். 2020-2021 நிதியாண்டில் 1.1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

    2018 டிசம்பரில் 1.9 கோடி பேர் வேலை பெற்றனர். 2019 டிசம்பர் 1.7 கோடியாக குறைந்தது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் காரணமாக டிசம்பர் 2020-ல் 2.7 கோடியாக அதிகரித்தது. 2021 டிசம்பரில் 2.4 கோடி பேர் வேலைப் பெற்றனர்.

    Next Story
    ×