search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
    X
    நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

    பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல்- வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை

    மாநிலங்களுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்பட்ட பின் நதிநீர் இணைப்பு திட்ட அறிக்கைகளை செயல்படுத்த நிதி உதவி அளிக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) பாராளுமன்றத்தில் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும்.

    முன்னதாக இன்று காலை 9 மணிக்கு நிர்மலா சீதாராமன் தனது நிதி அமைச்சக மூத்த அதிகாரிகளுடன் பட்ஜெட் தாக்கல் செய்ய புறப்பட்டார். முதலில் அவர் குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று ஜனாதிபதியை சந்தித்துப் பேசினார்.

    பிறகு பாராளுமன்றத்துக்கு புறப்பட்டு வந்தார். அங்கு பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    11 மணிக்கு பாராளுமன்ற மக்களவையில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    அனைவரும் எதிர்பார்த்தது போன்று பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    வரி செலுத்தும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். ஒருவர் செலுத்தும் வரி நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறது.

    தனி நபர் வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2½ லட்சமாக இருக்கிறது. தற்போதும் அதே நிலையே தொடரும்.

    ரூ.2½ லட்சத்துக்கு மேலும், ரூ.15 லட்சத்துக்கு மேலும் தற்போது விதிக்கப்படும் வரி சதவீதம் அப்படியே இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை.

    மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 3 லட்சமாக நீடிக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான வரியில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் ஜி.எஸ்.டி. வசூல் அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் சுமார் ரூ.1.40 லட்சம் கோடியாக உள்ளது.

    கோதாவரி- கிருஷ்ணா, கிருஷ்ணா-பெண்ணாறு, பெண்ணாறு- காவிரி, தமங்கா-பிஞ்சல், பர்தாபி- நர்மதா ஆகிய 5 நதிகள் இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. நதிகளை இணைக்கும் திட்டம் தமிழகத்துக்கு பலன் அளிக்கும்.

    மாநிலங்களுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்பட்ட பின் நதிநீர் இணைப்பு திட்ட அறிக்கைகளை செயல்படுத்த நிதி உதவி அளிக்கப்படும். ரூ.4 ஆயிரம் கோடியில் நீர்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×