என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
லடாக் மோதல் விவகாரம் - இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை
Byமாலை மலர்11 Jan 2022 8:31 PM GMT (Updated: 11 Jan 2022 8:31 PM GMT)
இரு நாடுகளுக்கு இடையே கடந்த அக்டோபர் 10-ம் தேதி நடந்த 13-வது சுற்று பேச்சுவார்த்தை எவ்வித முன்னேற்றமும் இன்றி தோல்வியில் முடிந்தது.
புதுடெல்லி:
கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய படைகள் தடுத்து நிறுத்தினர். இதில் இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு இந்தியாவும், சீனாவும் ஆயிரக்கணக்கில் படைகளை குவித்து கண்காணிப்பு பணிகளை பலப்படுத்தின. இதனால் எல்லையில் கடுமையான பதற்றம் தொடர்ந்து வருகிறது. எனினும் படைகளை திரும்பப்பெற்று அங்கு அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கு இரு நாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் அடிக்கடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதன் பலனாக பாங்காங் ஏரிக்கரை மற்றும் கோக்ரா பகுதிகளில் இருந்து இரு தரப்பினரும் படைகளை திரும்பப்பெற்று உள்ளன.
இந்நிலையில், இன்று 14-வது சுற்று பேச்சுவார்த்தை நடக்கிறது. சுசுல்-மோல்டோ எல்லையின் சீனப்பகுதியில் காலை 9.30 மணிக்கு நடைபெறும் இந்த சந்திப்பில் இந்தியா சார்பில் ராணுவ அதிகாரி அனிந்தியா செங்குப்தா தலைமையிலான குழுவினர் பங்கேற்கின்றனர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் லடாக் எல்லையில் உள்ள ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து படைகளை திரும்பப் பெறுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிகிறது. மேலும், தேஸ்பாங் பல்ஜ் மற்றும் டெம்சவுக் உள்ளிட்ட பிற சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்தும் படைகளை வாபஸ் பெறுமாறு இந்தியா வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்...கார் மீது தள்ளுவண்டி இடித்ததால் ஆத்திரம் - பழங்களை சாலையில் வீசிய பெண்மணி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X