search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியா சீனா பேச்சுவார்த்தை
    X
    இந்தியா சீனா பேச்சுவார்த்தை

    லடாக் மோதல் விவகாரம் - இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை

    இரு நாடுகளுக்கு இடையே கடந்த அக்டோபர் 10-ம் தேதி நடந்த 13-வது சுற்று பேச்சுவார்த்தை எவ்வித முன்னேற்றமும் இன்றி தோல்வியில் முடிந்தது.
    புதுடெல்லி:

    கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய படைகள் தடுத்து நிறுத்தினர். இதில் இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.

    இதையடுத்து அங்கு இந்தியாவும், சீனாவும் ஆயிரக்கணக்கில் படைகளை குவித்து கண்காணிப்பு பணிகளை பலப்படுத்தின. இதனால் எல்லையில் கடுமையான பதற்றம் தொடர்ந்து வருகிறது. எனினும் படைகளை திரும்பப்பெற்று அங்கு அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கு இரு நாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் அடிக்கடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதன் பலனாக பாங்காங் ஏரிக்கரை மற்றும் கோக்ரா பகுதிகளில் இருந்து இரு தரப்பினரும் படைகளை திரும்பப்பெற்று உள்ளன.

    இந்நிலையில், இன்று 14-வது சுற்று பேச்சுவார்த்தை நடக்கிறது. சுசுல்-மோல்டோ எல்லையின் சீனப்பகுதியில் காலை 9.30 மணிக்கு நடைபெறும் இந்த சந்திப்பில் இந்தியா சார்பில் ராணுவ அதிகாரி அனிந்தியா செங்குப்தா தலைமையிலான குழுவினர் பங்கேற்கின்றனர்.

    இந்தப் பேச்சுவார்த்தையில் லடாக் எல்லையில் உள்ள ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து படைகளை திரும்பப் பெறுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிகிறது. மேலும், தேஸ்பாங் பல்ஜ் மற்றும் டெம்சவுக் உள்ளிட்ட பிற சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்தும் படைகளை வாபஸ் பெறுமாறு இந்தியா வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×