என் மலர்
இந்தியா

சிவசங்கர்
ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் மீதான சஸ்பெண்டு உத்தரவு ரத்து
கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் மீதான சஸ்பெண்டு உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்திற்கு கடந்த 2020-ம் ஆண்டு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி முன்னாள் ஊழியர் சரித், ஸ்வப்னா சுரேஷ் உள்பட கூட்டாளிகளை கைது செய்தனர்.
இதில் கைதான ஸ்வப்னா சுரேசுக்கு கேரள முதல் மந்திரியின் முதன்மை செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கருடன் தொடர்பு இருந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து சிவசங்கர் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். அவரது சஸ்பெண்டு உத்தரவு 2 முறை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் மீதான சஸ்பெண்டு உத்தரவு ரத்து செய்யப்படுவதாக முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்தது. இதையடுத்து அவரை இன்று பணிக்கு திரும்பும்படி கேரள தலைமை செயலாளர் அறிவித்து உள்ளார்.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்திற்கு கடந்த 2020-ம் ஆண்டு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி முன்னாள் ஊழியர் சரித், ஸ்வப்னா சுரேஷ் உள்பட கூட்டாளிகளை கைது செய்தனர்.
இதில் கைதான ஸ்வப்னா சுரேசுக்கு கேரள முதல் மந்திரியின் முதன்மை செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கருடன் தொடர்பு இருந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து சிவசங்கர் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். அவரது சஸ்பெண்டு உத்தரவு 2 முறை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் மீதான சஸ்பெண்டு உத்தரவு ரத்து செய்யப்படுவதாக முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்தது. இதையடுத்து அவரை இன்று பணிக்கு திரும்பும்படி கேரள தலைமை செயலாளர் அறிவித்து உள்ளார்.
Next Story






