search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மீன் வியாபாரிக்கு 3 ஆயுள் தண்டனை
    X
    மீன் வியாபாரிக்கு 3 ஆயுள் தண்டனை

    கேரளாவில் சிறுமியை பலாத்காரம் செய்த மீன் வியாபாரிக்கு 3 ஆயுள் தண்டனை

    சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த மீன் வியாபாரிக்கு 3 ஆயுள் தண்டனை விதித்தும், மேலும் ரூ.1.5 லட்சம் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் அருகே எடச்சேரி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.

    அந்த சிறுமி அருகில் உள்ள மீன் வியாபாரி கிருஷ்ணகுட்டி (வயது 68) என்பவர் வீட்டிற்குச் மீன் வாங்க அடிக்கடி சென்று வந்தார். இந்த நிலையில் ஆசை வார்த்தை கூறி மீன் வியாபாரி அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அந்த சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அவரின்பெற்றோர் விசாரித்தபோது முதலில் சிறுமி பதில் எதுவும் கூறவில்லை.

    பின்னர் வற்புறுத்திக்கேட்டபோது பக்கத்து வீட்டைச் சேர்ந்த மீன் வியாபாரி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது குறித்து கண்ணீர் மல்க கூறினார். மேலும் சிறுமி கர்ப்பமாக இருந்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து வடனபில்லா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில்மீன் வியாபாரி கிருஷ்ணகுட்டி சிறுமியை பலாத்காரம் செய்தது தெரிந்தது.இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இது தொடர்பான வழக்கு குன்னங்குளம் சிறப்பு விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் 25 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் சிறுமிக்கு பிறந்த குழந்தையின் மரபணு ஆதாரம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் விசாரணை முடிவடைந்து நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அவர் தனது தீர்ப்பில், சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த மீன் வியாபாரி கிருஷ்ணகுட்டிக்கு 3 ஆயுள் தண்டனை விதித்தும், மேலும் ரூ.1.5 லட்சம் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் சிறுமி பலாத்கார வழக்கில் ஒருவருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது இதுவே முதல் முறையாகும் இதுபோன்ற ஒரு வழக்கில் 2 ஆயுள் தண்டனை விதித்து சமீபத்தில் போஸ்கோ கோர்ட்டு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×