என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தி.மு.க. மாநிலங்களவை எம்.பி.க்களாக எம்.எம். அப்துல்லா, கனிமொழி பதவியேற்பு
Byமாலை மலர்29 Nov 2021 6:10 AM GMT (Updated: 29 Nov 2021 6:10 AM GMT)
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட எம்.எம். அப்துல்லா, கனிமொழி ஆகியோர் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
அ.தி.மு.க.வைச் சேர்ந்த முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தனர். தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு இருவரும் வெற்றி பெற்றார்கள். இதனால் தங்களது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். அந்த பதவிக்கு தி.மு.க. சார்பில் கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் போட்டியிட்டு, இவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2019 ஜூலையில் அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட அ. முகமது ஜான் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மார்ச் 23-ம் தேதி காலமானார். இதனால் அவர் வகித்த மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியானது. காலியாக இருந்த மாநிலங்களவை இடத்துக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்துடன் உள்ள தி.மு.க. சார்பில் எம்.எம். அப்துல்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று பாராளுமன்றம் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் எம்.எம். அப்துல்லா, கனிமொழி ஆகியோர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X