search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 8,309 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 8,309 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,905 பேர் குணமடைந்துள்ள நிலையில், 236 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தற்போது 1,03,859 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது கடந்த 544 நாட்களில் குறைவான எண்ணிக்கை ஆகும்.

    இதுவரை இந்தியாவில் 3,40,08,183 பேர் குணமடைந்துள்ள நிலையில் 4,68,790 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கோப்புப்படம்

    நேற்று 42,04,171 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இதுவரை 1,22,41,68,929 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

    Next Story
    ×