என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் பள்ளி, கல்லூரிகளில் 29ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் -அமைச்சர் அறிவிப்பு
Byமாலை மலர்24 Nov 2021 9:53 AM GMT (Updated: 24 Nov 2021 9:53 AM GMT)
அனைத்து அரசு அலுவலகங்களும் திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் என்றும், அரசு ஊழியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையிலேயே உள்ளது. காற்று மாசைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நவம்பர் 21-ம் தேதி வரை கட்டுமானம், இடிப்பு பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அரசுத் துறைகளின் ஊழியர்கள் வீட்டிலிருந்து 100 சதவீதம் வேலை செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.
மேலும், வாகனங்களால் ஏற்படும் புகையின் அளவை குறைக்கும் வகையில் டெல்லி நகருக்குள் 26-ம் தேதி வரை லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் பேசுகையில், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் நிறுத்தப்பட்டிருந்த நேரடி வகுப்புகள், நவம்பர் 29 முதல் மீண்டும் தொடங்கும் என்றார்.
அனைத்து அரசு அலுவலகங்களும் திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் என்றும், அரசு ஊழியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்தியாவசிய சேவைகளுக்கான வாகனங்கள் தவிர, எரிவாயுவால் இயக்கப்படும் வாகனங்கள், மின்சார வாகனங்கள் மட்டும் நவம்பர் 27 முதல் டெல்லிக்குள் அனுமதிக்கப்படும். மற்ற எரிபொருட்களில் இயங்கும் வாகனங்கள் நுழைவதற்கான தடை டிசம்பர் 3ம் தேதி வரை நீடிக்கும் எனறும் அமைச்சர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X